'ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட
நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு, இனி
காகித வடிவில், ஒப்புகை சீட்டு வழங்கப்படாது'
என, மத்திய பணியாளர்
தேர்வாணையம்
அறிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., தேர்வுகள்:
இது குறித்து, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஐ.ஏ.எஸ்.,
- ஐ.பி.எஸ்., உள்ளிட்டவற்றுக்கு,
முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு
மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த
ஆண்டுக்கான, ஐ.ஏ.எஸ்.,
தேர்வுகள், வரும், 3 முதல், 9ம் தேதி
வரை நடக்க உள்ளன.
காகித வடிவத்தில் வழங்கப்படாது:
இந்த ஆண்டுக்கான, ஐ.ஏ.எஸ்.,
உள்ளிட்ட தேர்வுகள் நடத்தும்போது, அதற்கான ஒப்புகை சீட்டு,
இனி காகித வடிவத்தில் வழங்கப்படாது.
அதற்கு பதிலாக, இந்த ஒப்புகை
சீட்டுகள், இணையதளத்தில் பதிவிடப்படும். அதை தேர்வு எழுதுவோர்
பதிவிறக்கம் செய்து, தேர்வு எழுதும்போது
எடுத்து வர வேண்டும்.
அடையாள
அட்டை:
புகைப்படம்
தெளிவாக இல்லாமல் இருந்தால், விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்தை கையில்
எடுத்து வர வேண்டும். மேலும்,
ஆதார் உள்ளிட்ட, ஏதாவது ஒரு அடையாள
அட்டையும் எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.