நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர்
பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தி
மாநிலங் களுக்கு மத்திய அரசு
கடிதம் எழுதியுள்ளது.
மத்திய
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்
ஜவடேகர்
நேற்று கூறியதாவது:
நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்
பணியிடங்கள் காலி யாக உள்ளன.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணிபுரிகிறார்.
இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. ஆசிரியர்
பணியிடங்களை மாநில அரசுகள்தான் நிரப்புகின்றன.
எனவே, ஆசிரியர் பணியிடங்களை மிக விரைந்து நிரப்ப
மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதி
வருகிறேன்.
அத்துடன்
அனைத்து மாநிலங் களையும் சேர்ந்த
கல்வித் துறை அமைச்சர்களின் மாநாட்டை
விரை வில் நடத்த உள்ளோம்.
அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வது குறித்து
முக்கியமாக விவா தித்து முடிவெடுக்க
திட்டமிட்டுள் ளோம். இவ்வாறு பிரகாஷ்
ஜவடேகர் கூறினார்.
இதுகுறி்த்து
மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது,
‘‘பள்ளி களில் உள்கட்டமைப்பு மற்றும்
ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது கனவா
கவே இருக்கும். இந்தப் பிரச்சினை களைத்
தீர்க்க மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தி
வருகிறது. அத்துடன் உயர்க் கல்வித் துறையில்
காலி இடங்களை நிரப்பவும் அமைச்சகம்
தீவிரமாக உள்ளது’’ என்றனர்.