அக்டோபரில்
நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும்,
15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்'
என, அரசு தேர்வுத்
துறை
அறிவித்துள்ளது.
இதுகுறித்து,
அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ்
2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல்
திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்'
என, அறிவிக்கப்பட்டது.
14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக,
தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை
அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்.,
15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள்
சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க
வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து
உள்ளார்