தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் நன்மதிப்பைப்
பெற்று மக்கள் மனதில் நல்ல
நிலையில் நற்பெயர் கொண்ட
தமிழக பள்ளிக் கல்வித் துறையின்
புதிய கல்வி அமைச்சராகப் பதவி
ஏற்றுள்ள மதிப்பும் மேன்மையும் மிக்க திரு. கே.பாண்டியராஜன் ஐயா
அவர்களுக்கு TET நிபந்தனை
ஆசிரியர்களின் சார்பில் மனமுவந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில்
தமிழகத்தில் 23/08/2010க்குப் பிறகு அரசு
மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதை முறையே தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதில்
மாவட்ட வாரியாக பல சிக்கலான
நிலைகள் ஏற்பட்டன.
காரணம்
தமிழகத்தில் 15/11/2011 ல் தான் இது
தொடர்பான அரசாணை வெளிவந்தது.
முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும்
வரை ஆசிரியர் பணி நியமனங்கள் தமிழக
அரசின் முறையான நடைமுறைகளின் அடிப்படையில்
அனைத்து வகை பள்ளிகளிலும் பணி
நியமனங்கள் நடைபெற்றன.
(23/08/2010 அன்றைய
நடுவண் அரசின் அரசாணை அடிப்படையில்)
நாங்கள்
பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து
இன்று வரை பணிப் பாதுகாப்பு
இன்றி அரசின் சலுகைகள் அரைகுறையாக பெற்றும் வளரூதியம் ஊக்க ஊதியம் போன்ற
அடிப்படை பணப்பலன் கூட இல்லாத சூழலில்
பணியில் உள்ளோம்.
காரணம்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய
ஆசிரியர் தகுதித் தேர்வும் அதனைச்
சார்ந்த நிபந்தனைகளும்.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக
ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டும்
எதிர் வரும் நவம்பரில் எங்களின்
இறுதி நாட்கள் அமைய வாய்ப்பு
இருப்பதாக அரசாணை
எண் 181 கூறுவது மேலும் எங்களுக்கு
வாழ்க்கை பற்றிய பயத்தை தோற்றுவிக்கிறது.
சுமார்
பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக TET நிபந்தனைகளுடன் பணியில் இருந்த எங்களுள்
தற்போது 80% ஆசிரியர்களுக்கு முழுவதும் TET லிருந்து விலக்கு கிடைத்து விட்டது.
(2010 மே
மாதம் பதிவு மூப்பு மூலம்
சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம்
பெற்ற 50-60% ஆசிரியர்கள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமனம் பெற்ற 20-30% ஆசிரியர்கள்
TNTET லிருந்து முழு விலக்கு பெற்றவர்கள்
ஆவர்)
மீதமுள்ள
(நாங்கள்) 20% ஆசிரியர்களில் பாதிபேர் கலப்பு திருமண முன்னுரிமையிலும்,
விதவைகளும், இராணுவ வாரிசுகளும், தாழ்த்தப்பட்ட
பழங்குடி வகுப்பு இனத்தைச் சார்ந்த
பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில்
பணி நியமனம் பெற்றவர்கள். மீதி
பாதி ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகங்களால்
பலகட்ட போட்டி/ தகுதி/ நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களே.
கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக
நீதிமன்றம் வழக்குகள் காரணமாக TET தேர்வுகள் நடைபெறவில்லை.
எங்களுக்கான
பணிப் பாதுகாப்புக்கான முழு வாய்ப்புகளும் பறிபோன
விரக்தியிலும் மன வருத்தங்களை வெளியே
காட்டாமல் பள்ளிகளில் 100% சிறப்பாகவே ஆசிரியர் பணியாற்றி வருகின்றோம்.
எங்களுக்கு
TET லிருந்து முழு விலக்கு அளிக்கும்
பட்சத்தில் கல்விப் பணியில் முழுவதும்
எங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் மேலாக மாண்புமிகு தமிழக
முதல்வர் அம்மாவிற்கு எங்களின் தலைமுறையே நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பது உண்மை.
மிக குறைந்த அளவிலான TET நிபந்தனைகளுடன்
பணிபுரியும் ஆசிரியர்களாகிய எங்கள் வாழ்வு தமிழக
முதல்வர் மாண்புமிகு அம்மா அவரது கருணைக்
கரங்களில் தான் உள்ளன.
எங்கள்
வாழ்வாதாரம் தொடர்பான இந்த நிலையினை தாங்கள்
சற்றே உள்ளார்ந்து ஆராய்ந்து பார்த்து எங்கள் நிலையை மாண்புமிகு
தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் மேலான
கவனத்தில் எடுத்து சென்று (இந்த)
சுமார் 1500 ஆசிரியர் குடும்பங்கள் நிம்மதியாக மகிழுந்து எதிர் வரும் ஆசிரியர்
தினத்தினைக் கொண்டாட நடவடிக்கை எடுக்க
கல்வித் துறை அமைச்சகம் மூலம்
ஆவண செய்யுமாறு
மிகவும் பணிவன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறோம்.
மிக்க நன்றி ஐயா.
இப்படிக்கு,
விடியலை
எதிர்பார்க்கும்,
அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் 23/08/2010க்குப் பிறகு பணி
நியமனம் பெற்று, பின்னர் TNTET நிபந்தனைகளுடன்
பணியாற்றும் ஆசிரியர்கள்.